மென்சக்தியின் செல்வாக்கு குறித்து ஆராய்கிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு
சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்குத் தொடரில், இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு, எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம், 2ஆம் நாள்களில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
மென்சக்தி மற்றும் பூகோள விவகாரங்களில் அதன் செல்வாக்கு என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தக் கருத்தரங்கில் பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டு, சக்தி, மென்சக்தி கோட்பாடு, அவற்றின் தாக்கங்கள், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஆயுதப்படைகள், பூகோள விவகாரங்களில் மென்சக்தியின் செல்வாக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.