எட்கா உடன்பாடு குறித்த பேச்சுக்கள் செவ்வாயன்று ஆரம்பம்
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில், வரும் செவ்வாய்க்கிழமை, பூர்வாங்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வரவுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்திடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள எட்கா உடன்பாட்டை இறுதி செய்வதற்கான பணிகள், இந்தப் பேச்சுக்களின் போது முன்னெடுக்கப்படும் என்று அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் சந்திரானி விஜேவர்த்தன தெரிவித்தார்.