இந்தியா – சிறிலங்கா இடையே பாலம் அமைக்கும் திட்டம் இல்லை – சிறிலங்கா அமைச்சர்
இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
“முன்னர் கூட்டு எதிரணியினர் பிணை முறி விவகாரத்தைக் கிளப்பினர். பின்னர் வற் வரி விவகாரத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், வெளிநாடு நீதிபதிகளை கொண்டு வரவுள்ளதாக பிரச்சினை கிளப்பினர்.
இப்போது அவர்கள் அனுமன் பாலத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக அவர்கள் அனுமனின் வாலில் தொங்குகின்றனர்.
இந்தப் பாலத்தை அமைப்பதற்கு காரணம் எதுவும் கிடையாது. எமது நாட்டுக்குள் பல பாலங்களை நாம் அமைக்க வேண்டியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.