எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்விலேயே புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க, ஜனநாயக ஆட்சிக்கான இராஜாங்க அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராகவும், ஹேமல் குணசேகர, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், சந்திரசிறி சூரியாராச்சி, பிரதி காணி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தியுற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் அண்மையில் பதவி விலகிய நிலையிலேயே, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.