சீனாவை ஓரம்கட்டவில்லை – என்கிறது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு
சிறிலங்கா அரசாங்கம் சீனாவை ஓரம்கட்டுவதற்கு முடிவு எதையும் எடுக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனாவை ஓரம்கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர்,
“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
எனவே சீனாவை ஓரம்கட்டுவதாக எவரும் கூற முடியாது. சொற்களை விட செயல்கள் தான் பெரிதானது.
அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதில் சிறிலங்கா ஆர்வம் கொண்டுள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு மீளாய்வு செய்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.