மேலும்

மன்னார் ஆயரின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பு

mannar-bishopபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் ஆண்டகை, தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த போது பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, வாகனத்தில் மயங்கி வீழ்ந்த மன்னார் ஆயர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, அவரது உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவ கலாநிதி சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயர் நல்ல நிலையில் இருப்பதாகவும், எனினும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *