நாளை சுஸ்மா, திங்களன்று மோடியுடன் பேச்சு நடத்துகிறார் மங்கள சமரவீர
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நாளை புதுடெல்லிக்கு தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, நாளை பிற்பகலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதையடுத்து, நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை, இலக்கம் 7, ரேஸ்கோஸ் வீதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தப் பேச்சுக்களில், முக்கியமான பல விவகாரங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா அதிபரின் இந்தியப் பயணம் குறித்தும் இதன் போது பேச்சுக்கள் இடம்பெறும்.