மேலும்

Archives

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக  கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.

மகிந்தவைப் போல, மைத்திரி கையிலும் ‘வஜ்ரா’

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும் என்று கூறப்படும், ‘வஜ்ரா’ என்ற தங்க நிறமுள்ள மாந்திரீகப் பொருள் ஒன்றை தனது கைக்குள் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தரிக்கும் ஐந்தரை இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.

ஹப்புத்தளையில் ஐதேக கூட்டம் மீது ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்.

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

வடக்கு, கிழக்கில் ஒருநிறம்; தெற்கில் ஒரு நிறம் – மகிந்தவின் வண்ணஜாலம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை

எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையில் சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்கா படையினர் மத்தியில், தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக, ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்த சிஐஏயின் இரகசிய அறிக்கை – விக்கிலீக்ஸ்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை (High Value Target) படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் ஆணைக்குழுவைத் திணறவைத்த முறைப்பாடுகள்

வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமற்போனோர் குறித்து, சிறிலங்கா அதிபர் நியமித்த ஆணைக்குழுவிடம் புதிதாக 328 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறைக்கைதிகளையும் விட்டுவைக்காத சிறிலங்கா அரசு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு, அரசாங்க வளங்களை மட்டுமன்றி சிறைச்சாலையில் உள்ள கைதிகளையும் பயன்படுத்தி வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.