மேலும்

Tag Archives: மில்லியன்

சிறிலங்காவில் பணியாற்ற ஆறரை இலட்சம் டொலர் தேவை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேர் பிணையில் விடுவிப்பு

வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் இன்று, கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 3000 தொட்டிகளை அமைக்கவுள்ளது இந்தியா

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கான நிதியுதவியை அதிகரிக்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சிறிலங்காவுக்கு வழங்கும் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.

நாளாந்தம் 2 மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிக்கும் 9 இலட்சம் அரச பணியாளர்கள்

சிறிலங்காவில் அரச பணியாளர்கள் நாளொன்றுக்கு வேலை நேரத்தில் இரண்டு மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிப்பதாகவும், இதனால், நாளாந்தம் 1.8 மனித மணித்தியாலங்கள் அரச சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மாகாணசபையின் அதிகாரங்களைப் பிடுங்குகிறது மத்திய அரசு – வட மாகாண முதல்வர் குற்றச்சாட்டு

மாகாணசபைகளிடம் இருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் முன்வைத்துள்ள கிராம இராஜ்ஜியத் திட்டம் மற்றொரு அதிகாரப் பறிப்பு முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.

உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சிறிலங்கா வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சியில் திறன் விருத்தி நிலையத்தை அமைக்கிறது இந்தியா

யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் திறன் விருத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் 300 மில்லியன் ரூபா திட்டம் ஒன்றை இந்தியா ஆரம்பித்துள்ளது.