போர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை
பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.