நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் : பாகம்-1
உலகம் எங்கும் பரந்து வாழும் சமுதாயம் என்பதில் பெருமை கொண்டு வாழ்வது, தமிழ் சமுதாயம் ஆகும். உள்நாட்டு யுத்தத்தால் ஈழத்தமிழர்கள் நாடுகள் பல கடந்து வாழ்கின்றனர். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து வேலையாட்களாகவும் போர் வீரர்களாகவும் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாடுகளிலேயே தேசியம் பேசும் சுதேசிகளாக மாறி வாழ்கின்றனர்.