பெங்களூரு சென்றார் மகிந்த
இரண்டு நாட்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
நாமல் ராஜபக்சவின் சிறப்பு பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி அளித்தது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைய, தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.
தம்மிடம் செல்லுபடியாகக் கூடிய அமெரிக்க நுழைவிசைவு இருந்த போதிலும், தாம் அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க, மொஸ்கோவில் இருந்து, ஹொஸ்டனுக்குச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.