மேலும்

Tag Archives: சீனா

சிறிலங்கா துறைமுகங்களை பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி இல்லை – ரணில் உறுதி

ஏனைய நாடுகளின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும் பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை இழுபறிக்கு சிறிலங்காவே காரணம் – மலிக் சமரவிக்கிரம

சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு சிறிலங்கா அரச தரப்பே காரணம் என்று, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு

சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார்.

20 வெளிநாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா கடற்படை சிறப்புப் பயிற்சி

கடினமான உழைப்பின் மூலம் பெற்றுக் கொண்ட சீரற்ற போர்முறை அனுபவங்களை பெருங்கடல் பிராந்தியத்தின் ஏனைய இராணுவ பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு சிறிலங்கா கடற்படை மகிழ்ச்சி அடைவதாக சிறிலங்கா கடற்படை தலைமை அதிகாரி றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை விவகாரத்தினால் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் இறைமை, சுதந்திரத்தைப் பாதுகாப்பது சீனாவின் கடமை – சீன அரசின் உயர் பிரதிநிதி

சிறிலங்காவுடனான 60 ஆண்டுகால உறவுகளை பலப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும், அதன் சுதந்திரம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்று சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சீனாவின் உயர்மட்ட ஆலோசகர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம்

தெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு  விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.