சிறிலங்காவுக்கு மேலும் 2 பில்லியன் யுவான்களை வழங்குவதாக சீன அதிபர் உறுதி
சிறிலங்காவுக்கு 2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார். சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.




