மேலும்

Tag Archives: சீனா

சிறிலங்காவுக்கு மேலும் 2 பில்லியன் யுவான்களை வழங்குவதாக சீன அதிபர் உறுதி

சிறிலங்காவுக்கு  2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை  வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார்.  சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன அதிபர் வாக்குறுதி

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா பிரதமர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சனியன்று சீனா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே 13 ஆம் நாள் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவுடன் அல்ல, இந்திய நிறுவனத்துடனேயே உடன்பாடு செய்வோம் – சிறிலங்கா பிரதமர்

இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது குறித்த கொள்கை ரீதியான முடிவே எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா பிரதம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகாரத்துவ நாடுகளின் போட்டியை சாதகமாக்கும் சிறிலங்கா

சீனா, ரஸ்யா, ஜப்பான், இந்தியா போன்ற பிராந்திய அதிகாரத்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய ஆசியப் பிராந்தியந்தின் ஊடாக தமது அரசியல் மற்றும் பொருளாதார இருப்பிடத்தை நிலைநாட்டுவதற்கு போட்டியிடுகின்றன.

சீனா, இந்தியா, ஜப்பானின் மிகப்பெரிய விளையாட்டுக் களமாகும் சிறிலங்காவின் துறைமுகங்கள்

சிறிலங்காவில் இடம்பெற்ற பல பத்தாண்டு கால யுத்தம், 2009ல் நிறைவு பெற்ற பின்னர்  நாடு தற்போது தன்னை அபிவிருத்தி செய்து வரும் தருணத்தில் இந்திய மாக்கடல் மீதான அனைத்துலக சமூகத்தின் அக்கறை அதிகரித்துள்ளது. இலங்கைத் தீவானது பல்வேறு பாரிய சக்தி வாய்ந்த நாடுகளின் கவனத்திற்கு உட்பட்டுள்ளது.