மேலும்

Tag Archives: கலப்பு விசாரணை

ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

கலப்பு விசாரணை, காலவரம்பு, கண்காணிப்பு செயலக கோரிக்கைகளை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை அமைக்கவும், தெளிவான காலவரம்புக்குட்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமைக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபருடன் நல்லிணக்க கலந்தாய்வு செயலணி சந்திப்பு

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கலப்பு நீதிமன்ற பரிந்துரை – சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு இன்று வெளியாகும்?

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, கலப்பு நீதிமன்ற விசாரணைப் பரிந்துரை தொடர்பான, தனது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை – என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து படையினரைக் காப்பாற்ற சிறிலங்கா அரசு நடவடிக்கை

போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறிலங்காப் படையினர் சார்பில் வாதிடுவதற்கான சட்டவாளரை நியமித்து, அவர்களுக்கான சட்ட செலவுகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கமே, ஏற்றுக் கொள்ளவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம்.

கலப்பு நீதிமன்ற விவகாரம் – நாடாளுமன்றில் அவசர விவாதம் நடத்தக் கோருகிறார் விமல் வீரவன்ச

போர்க்குற்றங்கள் குறித்து கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மனுவொன்றைக் கையளித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.