எமது தீர்வு யோசனைக்கு பதிலளிக்கப் பயந்தே பேச்சுக்களை முறித்தார் மகிந்த – சம்பந்தன் குற்றச்சாட்டு
நாங்கள் முன்வைத்த, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சு மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.