மேலும்

Tag Archives: அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் இராணுவத் தளமா? – சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டையில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள எதிர்பார்க்கக் கூடும் என்று வெளியாகும் தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மகாநாயக்கர்களிடம் மூக்குடைபட்டது கூட்டு எதிரணி

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டை படித்துப் பார்க்காமல், அதனை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் ரணில்

சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட தென்மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஜனவரி 7ஆம் நாள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அம்பாந்தோட்டை குறித்த குற்றச்சாட்டுகள் – சிறிலங்கா அதிபரிடம் சீனத் தூதுவர் கவலை

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவுக்கு எதிராக நாமல் ராஜபக்ச தலைமையில் ஆர்ப்பாட்டம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டை உடன்பாடு – முழு விபரங்களையும் அம்பலப்படுத்தக் கோருகிறது ஹெல உறுமய

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய முழுமையாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கரில் 95 வீதம் அரச காணிகள்

அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 90 – 95 வீதமான காணிகள், அரச காணிகளே என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத் தேவைக்கு பயன்படுத்த முடியாது

அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்கா கடற்படை தவிர்ந்த வேறெந்த கடற்படையினாலும், இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.