மேலும்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரி – கருத்துக்கூற மறுக்கிறது கூட்டமைப்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.

அதிபர் தேர்தல்: கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப்பாட்டை எடுக்க முடிவு?

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொதுவான ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கின் தற்போதைய நிலவரங்கள் – டோவலுக்கு கூட்டமைப்பு விளக்கம்

போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

யாருக்கு ஆதரவு? – நிதானமாக முடிவெடுக்க கூட்டமைப்பு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், தமிழ்மக்கள் , சிவில் சமூகத்தினது கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்கும் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கூட்டமைப்பு இன்னும் இணையவில்லை – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து  வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிடிவாதத்தை தளர்த்தினார் ரணில் – போட்டியில் இருந்து ஒதுங்க முடிவு

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஐதேக சார்பில், போட்டியிடப் போவதாக கூறி வந்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.