மேலும்

Tag Archives: கிளிநொச்சி

சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி – இந்திய தூதுவர்

சிறிலங்கா மக்களின் நலன் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடர்ந்தும் செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள், கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்படும், சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

காங்கேசன்துறையில் இருந்து உதவிப் பொருட்களுடன் புறப்படுகிறது மனிதாபிமான தொடருந்து

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காங்கேசன்துறையில் இருந்து மாத்தறைக்கு “மனிதாபிமான தொடருந்து” இன்று பயணமாகவுள்ளது.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடக்கு, கிழக்கு பகுதிகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.

விவசாயப் பண்ணைக் காணிகளை விடுவிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிபந்தனை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாயப் பண்ணைக் காணிகளை சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து, வடக்கு மாகாணசபையிடம் கையளிப்பதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.

சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது – கிளிநொச்சியில் பேரணி

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறும் நிலையில், கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதாக மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி,  நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.

இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.