மேலும்

Tag Archives: கடற்படை

கடற்படையிடம் ஒப்படைக்கப்படவில்லை – ராஜிதவின் அறிவிப்பை விஜேதாச நிராகரிப்பு

அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவில்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறே அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘போர்க்குற்றச்சாட்டுகள் முதல் அவன்கார்ட் வரை’ – சரத் பொன்சேகாவின் செவ்வி

இறுதி போரில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக வெளியிட்டப்படும் சில காணொளிகளை ஏற்க முடியாது, ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம், அதுபற்றி முறையான விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று  சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்றுடன் முடிகிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்று வந்த கூட்டுப் பயிற்சி இன்று நிறைவடையவுள்ளது. ‘SLINEX 2015’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த மாதம் 27ஆம் நாள் ஆரம்பமானது.

இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் பாரிய கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்

சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கு இடையிலான பாரிய கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

திகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு

திகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வருவதற்கு பச்சைக்கொடி காட்டுகிறார் ரணில்

சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனக் கடற்படை கப்பல்கள் அனுமதி கோரினால் பரிசீலிப்போம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சீனக் கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு மீண்டும் வருவதற்கு அனுமதி கோரினால் அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலிக்கு அப்பாலுள்ள கடலில் சிறிலங்கா கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்

காலிக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில், சிறிலங்கா கொடியுடன் ஆயுதக் கப்பல் ஒன்று சிறிலங்கா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

ரவிராஜ் படுகொலை பிரதான சந்தேகநபர் சுவிசில் – சிறிலங்காவுக்கு கொண்டு வர நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய, முக்கிய சந்தேகநபரை சுவிற்சர்லாந்தில் இருந்து விசாரணைக்காக சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.