எசல வீரக்கோனுக்கு வெளிவிவகாரச் செயலர் பதவி – பின்னணிக் காரணம் வெளியானது
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், இடைக்கால நீதிச் செயல்முறை மற்றும் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவைகளைக் கருதியே, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.