மேலும்

சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது கொண்ட கோபத்தினால், அந்த விகாரையில் இருந்த சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை அடித்து நொருக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் விகாராதிபதி.

ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு சிறிலங்காவுக்கு 16 நிபந்தனைகள்

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

சிறிலங்காவுக்கு அடுத்தடுத்துப் படையெடுக்கும் முக்கிய நாடுகளின் உயர்நிலைப் பிரமுகர்கள்

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உயர்மட்டப் பிரமுகர்கள் அடுத்தடுத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

இந்தவாரம் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பத்து ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு அவசியம் – பிரித்தானியா

சிறிலங்காவில் உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர், பிரதமரைச் சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கண்டியில் தலாய்லாமா குறித்த கண்காட்சி – சீனா அதிருப்தி

சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, கடந்த புதன்கிழமை தலாய்லாமா தொடர்பான ஒளிப்படக் கண்காட்சி ஒன்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுடன் வலுவான உறவுகள் தொடரும் – சீன வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் பெரியளவிலான உட்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், சிறிலங்காவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.