மேலும்

அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அடுத்தவாரம் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை உடன்பாடுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன்?- கலந்தாய்வு செயலணி விளக்கம்

பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி தெரிவித்துள்ளது.

நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசியலமைப்பு மாற்றம்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக நாடு தழுவிய ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கும் அப்பால் மீண்டும் ஒருமுறை மக்களுடன் அரசியல் சாசனம் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக கண்டியில் உயர் மட்ட பௌத்த மதகுருமார்களுடனான சந்திப்பின் போது அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை – என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய போர் விமானக் கொள்வனவு குறித்து இன்னமும் முடிவு இல்லை

மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிதாக கொள்வனவு செய்யப்பட வேண்டிய பல நோக்குப் போர் விமானத்தின் தேவைப்பாடுகள் குறித்த செயல்முறைகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கலப்பு நீதிமன்ற பரிந்துரையை வரவேற்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை, கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரவேற்றுள்ளார்.

கோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரவணைப்பிலேயே இருந்தது என்று,  சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.