மேலும்

ரவி கருணாநாயக்கவுடன் மைத்திரி, ரணில் ஆலோசனை – விரைவில் பதவி விலகுவார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை – புலம்புகிறார் மகிந்த

மூன்று பத்தாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி

அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து மிகப் பாரிய ஆயுத ஏற்றுமதியாளராக முடியும் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூலோபாய இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

அடுத்த வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம?

சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவின் வெளிநாட்டுத் தொடர்புகளைக் கண்டறிய தீவிர விசாரணை

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் நிலை – முடிவை ரணில் அறிவிப்பார்

மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடி விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக, சிறிலங்கா அதிபரும், பிரதமரும் முடிவெடுப்பார்கள் என்று ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

நத்தைவேகத்தில் சிறிலங்காவுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியது ரஷ்யா

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 32 தொன் உதவிப் பொருட்களை விமானம் மூலம் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக, ரஷ்யாவின் சிவில் பாதுகாப்பு, அவசர மற்றும் அனர்த்த உதவி அமைச்சின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவரிடம் யாழ்ப்பாணத்தில் விசாரணை

கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்களும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த நாளை முடிவை அறிவிப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

ஆவா குழுவின் முன்னணி தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோட்டம் – சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.