மேலும்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி – சிறிலங்கா, இந்தியாவுடன் ஜப்பான் பேச்சு

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு திடீர் முடிவு

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

வருண ரோந்துக் கப்பலை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா

இந்திய கடலோரக் காவல்படை நேற்று வருண என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் அதிகாரபூர்வமாக கையளித்தது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சந்திப்பு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரேசிலை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஜெனரல் ஜயசூரிய? – சந்தேகம் கிளப்பும் தூதுவர்

பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட் நாளிதழில், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றிய பந்து டி சில்வா எழுதியுள்ள குறிப்பு-

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா -படங்கள்

ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது.

தவறு செய்தவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – அரச தலைவர்களுக்கு சரத் பொன்சேகா பதிலடி

இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.