மேலும்

நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை – ஆளுனரின் கையில் நிர்வாகம்

கிழக்கு மாகாணசபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனர் ரோகித போகொல்லாகம நாளை கையில் எடுத்துக் கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளைச் சாடும் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான வாய்ப்புகளுக்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிறிலங்காவின் சாதாரண பொதுமக்களுக்கு உதவுவதில் ஏனைய வெளிநாடுகள் கவனம் செலுத்த முடியும் என்று சீனத் தூதுவர் ஷி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் புலனாய்வு நிபுணத்துவ பரிமாற்றங்கள்

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பல்படையின் பிரதிநிதியான லெப்.கொமாண்டர் ரூபென் புலோப்வ்ஸ்ரெய்ன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடு

வடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான நுழைவிசைவுக் கட்டுப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இரண்டு மணிநேரம் முடங்கியது கட்டுநாயக்க விமான நிலையம் – பயணிகள் அவதி

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால், நேற்று பிற்பகல் விமான நிலையத்தில் பயணிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

மகாசங்கங்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடத்த வேண்டும் – அமரபுர மகாநாயக்கர்

நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அமரபுர பீடத்தின் மகாநாயக்கரான கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக சிறிலங்கா அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங்களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி ஐ.நா பணியகம் முன் போராட்டம்

சிறிலங்காவில் இருந்து ரொஹிங்யா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக, நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

மீண்டும் சந்தித்த மகிந்த – ராஜித

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி சிரித்துப் பேசிய நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.