மேலும்

புயலில் ஒரு தோணி..

தமிழ்கூறு நல்லுலகெங்கும் புயல் வீசி சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புதினப்பலகை’ எனும் இச்சிறு தோணி 17-11-2009ல் தனது பயணத்தை தொடங்கியது.  

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.

“மே 19”

உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.

மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?

4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன.