மேலும்

யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.

கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தன், பாடகர் நாகூர் ஹனீபா ஒரே நாளில் மறைவு

பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனும், பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபாவும், நேற்று சென்னையில் காலமாகினர்.  பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன், உடல் நலக்குறைவால் நேற்றிரவு  9 மணியளவில், காலமானார். அவருக்கு வயது 81.

சுசிலிடம் பந்தை வீசினார் சபாநாயகர் – சம்பந்தனுக்கு வாய்ப்புக் குறைவு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைத் தருமாறு கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பதவி விலகாவிடின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் பதவி விலகாது போனால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.

யாழ். ஊடகவியலாளர் சிறையில் அடைப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழில், பிரதேச செய்தியாளராகப் பணியாற்றும், ஊடகவியலாளர் ஒருவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

யாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் தினமும் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

பிரித்தானியாவில் நாளொன்றுக்கு 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள், கைது செய்யப்படுவதாக, அந்த நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, தி ரெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சிங்கப்பூரில் மரணம்

சிறிலங்காவின் மிகவும் செல்வாக்குப் பெற்ற இரண்டு பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின், மகாநாயக்க தேரரான, வண.உடுகம சிறீ புத்தரகித்த தேரர், இன்று சிங்கப்பூரில் காலமானார்.

ஐபிஎல் துடுப்பாட்டத் தொடர்: சென்னைப் போட்டிகளில் சிறிலங்கா வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டித்தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.