மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் நுழையும் அமெரிக்கா

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் கடந்த வாரம்,  சிறிலங்காவுக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிறிலங்கா மீது விதித்த வரிகள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து, கலந்துரையாடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.

ஆட்கடத்தல் வழக்கிலேயே முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் கைது

2010ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவே,  சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொஹோற்றி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிள்ளையான்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர்,  மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் 500 மில்லியன் யென் கொடையை ஏற்றுக் கொள்கிறது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படை தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கு, ஜப்பானிடம் இருந்து 500 மில்லியன் யென் (சுமார் 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்) கொடையைப் பெறுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

போருக்குப் பின் சிறிலங்கா வந்த 700க்கும் அதிகமான வெளிநாட்டு போர்க்கப்பல்கள்

போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.

வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சென்னைக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் நியமனத்தில் சர்ச்சை

சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டம் இந்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு பொதுமக்களின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்படும் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2027 வரை சிறிலங்காவை கண்காணிக்க கோருகிறது புதிய தீர்மான வரைவு

சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.