மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

சுரேஷ் சாலே மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம்- 3 நாள்கள் தடுப்புக்காவல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானப் பணி நிறுத்தப்படாது

யாழ்ப்பாணம் அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின்  (SIS) முன்னாள் தலைவரான  மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு நாள் நிகழ்வுக்காக 11 மில்லியன் ரூபாவை கரைத்த சிறிலங்கா அதிபர்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாள், யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்விற்காக, 11,079,075.50 (11 மில்லியன்) ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் காணாமல்போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளனர்

சிறிலங்காவில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியனும் ரத்துச் செய்தது

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், சிறிலங்கா பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற மக்ரோனிடம் உதவி கோரினார் அனுர

இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு,  பிரான்ஸ்  அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் சிறிலங்கா அதிபர் உதவி கோரியுள்ளார்.

அவதூறு முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறை ஏற்கக் கூடாது

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்ற புலனாய்வு நிறுவனங்கள், அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கக்கூடாது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கொடுத்த மற்றொரு கப்பல் சிறிலங்காவுக்குப் புறப்பட்டது

அமெரிக்க கடலோரக் காவல்படையின் முன்னாள் கப்பலான USCG DECISIVE சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொள்வதற்காக, மேரிலான்டின், பால்டிமோர் துறைமுகத்தில்  இருந்து  சிறிலங்கா நோக்கி நேற்று புறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் ஸ்டீபன்  கோஹ்லர், நேற்று சிறிலங்கா  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.