இந்திய துணை குடியரசு தலைவர் முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார்
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, சிறிலங்காவின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரபூர்வ முடிவுகளை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு சதியின் விளைவு என்றும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.
சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா படைகள் அனுப்பப்படவுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் நிகழாமல் தடுக்க, சிறிலங்கா போராடி வருகிறது. நவம்பரில் ஏற்பட்ட ஒரு கொடிய புயலின் பாதிப்புகளுடன், நீடித்த மத்திய கிழக்கு போரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
சிறிலங்காவும் ரஷ்யாவும் நீண்டகால எரிசக்தி விநியோகம் தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு வர முடியும் என ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நீண்டகால அமைதியையும் உறுதித்தன்மையையும் உறுதி செய்வதற்காக, கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பைப் பேணுவதன் மூலோபாய முக்கியத்துவத்தை, சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது.