மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

உதவிப்பொருட்களுடன் 2 விமானங்களில் அமெரிக்க படையினர் சிறிலங்கா வருகை

சிறிலங்காவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, உதவிப் பொருட்களுடன், அமெரிக்க விமானப்படையின் இரண்டு  சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளன.

மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் 4 கப்பல்கள் புறப்பட்டன

டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு  கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. 

அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரண்

சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு 4வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க கடலோர காவல்படையின், ரோந்துக் கப்பலான USCGC Decisive சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நீர்வரைவியல் ஆய்வுக்கு உதவ அமெரிக்க நிபுணர்கள் வருகை

சிறிலங்காவின் நீர்வரைவியல் (hydrographic) முயற்சிகளுக்கு   ஆதரவு வழங்க அமெரிக்க நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி

திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவருக்கு, ஆலயத்தின் மின்பிறப்பாக்கி  வைக்கப்பட்டிருந்த இடத்தை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.

அஜித் டோவலுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

சிறிலங்கா  பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும், இந்தியாவின்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.