மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்

சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கும் 29 வயதான விஜிதரன் மரியதேவதாஸ் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விளக்கினார்.

மகிந்தவுக்கு எதிராக மலேசியாவில் தொடர்கிறது போராட்டம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மலேசியாவில் நேற்று இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நாளையுடன் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ (‘Road to Nandikadal’)  நூல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளில் இருந்து நழுவினார் பான் கீ மூன்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்  தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நழுவினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொறிமுறைக்கே ஐ.நா உதவும் – பான் கீ மூன் உறுதி

பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கே ஐ.நா உதவிகளை வழங்கும் என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தம்மிடம் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வீமன்காமத்தில் பான் கீ மூன் – மீளக்குடியேறிய மக்களை சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட  ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் – கூட்டமைப்பையும் சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ  மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பான் கீ மூனிடம் கால அவகாசம் கோரிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் காலஅவகாசம் வழங்குமாறு தாம் கோரியதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“மகிந்தவே வெளியேறு” – மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, இன்று காலை கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடா இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் மோதிய இரு தமிழ் வேட்பாளர்களும் தோல்வி

கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர்.