பிடல் காஸ்ட்ரோவும் தமிழரின் உரிமை போராட்டமும்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர்.