மேலும்

பிரிவு: கட்டுரைகள்

சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசேன் சிறிலங்காவால் நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இப்பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.

போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தற்போது வாழ்கின்றனர்.  தாம் தற்போது வாழும் அகதி முகாமானது ஒருபோதும் தமக்கான சொந்த வீடாகாது என்பதை இவர்கள் நன்கறிந்துள்ளனர் .

சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்

‘சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2

‘மாலியில் பணியாற்றுவதற்காக எமது வீரர்கள் அழைக்கப்பட்டமையானது அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது’ என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்சா டீ சில்வா தெரிவித்தார்.

சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என தனது தாயார் வீட்டின் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில்,  பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2

சிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார்.

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.

சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள்

சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ சார் முரண்பாடுகள் ஏற்படவில்லை.