மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கொழும்பில் கடலை நிரப்பி 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா

கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 300 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். 

மத்தல விமான நிலையத்துக்காக 325 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது இந்தியா

மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை கொள்வனவு செய்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து-  இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை அதனை கூட்டு முயற்சியாக  இயக்கவுள்ளது.

விஜயகலா உரையின் சிங்கள, ஆங்கில மொழியாக்க வடிவங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகள் தொடர்பான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் சிங்கள, அங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குமாறு அரசாங்க மொழிபெயர்ப்பு திணைக்களத்துக்கு கோட்டு நீதிவான் நீதிமன்ற நீதிவான், ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் திட்டங்களை இந்த ஆண்டில் ஆரம்பிக்க சிறிலங்கா இணக்கம்

இந்தியாவின் உதவி மற்றும் முதலீட்டிலான  திட்டங்கள் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்க சம்பந்தனிடம் தாய்லாந்து பிரதமர் உறுதி

தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கும்படி, தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சாவிடம்,  எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தூக்கிலிடுபவர்களை நியமிக்க நடவடிக்கை

சிறிலங்காவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கிலிடுபவர் (அலுகோசு) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

நாளை கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார்.

புஷ்பா ராஜபக்சவுக்கு கொடுத்த 19.41 மில்லியன் ரூபா இலஞ்சமல்ல என்கிறது சீன நிறுவனம்

புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, 19.41 மில்லியன் ரூபா காசோலையை கொடையாகவே வழங்கியதாக, சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.