மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இந்தியாவின் பங்கை கணிப்பிடுவது கடினம் – முதலமைச்சர்

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ். குடாநாட்டில் 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர் – என்கிறார் தளபதி

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர் மனுக்களைத் தாக்கல் செய்ய முதலமைச்சருக்கு கால அவகாசம்

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மை நீக்கியதற்கு எதிராக, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீது, அளிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, ஓகஸ்ட் 8ஆம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு 160 கோடி ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா

நல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அமெரிக்கா 160 கோடி ரூபாவை (10 மில்லியன் டொலர்) சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

றிவிர வாரஇதழ் இணை ஆசிரியரிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை

றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா

சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர்

கோத்தாபய ராஜபக்சவை  அதிபர் வேட்பாளராக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்று வெளியாகிய செய்திக் குறிப்பை, மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளரும், கோத்தாபய ராஜபக்சவும் நிராகரித்துள்ளனர்.

குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம்

புகலிடம் தேடிய, கணவனை சிறிலங்காவுக்கு நாடு கடத்தி இலங்கை தமிழ் குடும்பத்தைப் பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர்

வடக்கில் செயற்படும் ஆவா குழு தீவிரவாத அமைப்பு அல்ல என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்

உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை தொடர்ந்தும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.