மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்

சிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

திருமலை அபிவிருத்தி திட்ட வரைவை சமர்ப்பித்தது சிங்கப்பூர் நிறுவனம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது,

முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரம் – சிறிலங்கா அதிபர் திட்டம்

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

விக்னேஸ்வரனின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்தது நீதிமன்றம்

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் அரசிதழ் மீதான இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை

அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்

விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பறிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா, ரஷ்யாவுடனான உறவுகள் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதம் – என்கிறார் பீரிஸ்

ரஷ்யா மற்றும் சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளை மைத்திரிபால – ரணில் அரசாங்கம் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி? – விசாரணையின் தகவல்

2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கும் – சீனத் தூதுவர்

சிறிலங்கா மக்களுக்கு நன்மை அளிக்கும், உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கும் என்று, சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.