மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும்- தரன்ஜித் சிங் சந்து

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

கொச்சிக்கடை குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலஅவகாசம் கோரியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு

சிறிலங்கா காவல்துறையின், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவோர் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.

தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வவுணதீவு கொலைகள் – 5 மாதங்களுக்குப் பின் முன்னாள் போராளி விடுதலை

மட்டக்களப்பு- வவுணதீவில், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.