மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயணம் – இன்னமும் முடிவு இல்லை

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் சிறிலங்கா பயணம் குறித்த காலஅட்டவணை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

பலாலியில் அனைத்துலக விமான நிலையம் – மாவையிடம் திட்ட முன்மொழிவு

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக விரிவாக்கும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – ஜனவரி 6இல் இறுதி முடிவு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, வரும் ஜனவரி 6ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம் – திலக் மாரப்பனவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி?

சிறிலங்கா அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் நாள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளன.

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அரசு

அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு – அடுத்த ஆண்டில் பேச்சு நடத்தவுள்ளது சீனா

சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் முக்கிய ஜனநாயக வெற்றி கிடைத்த ஆண்டு – ஜோன் கெரி

2015ஆம் ஆண்டு சிறிலங்காவிலும் உலகின் ஏனைய சில நாடுகளிலும், மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.தொடக்கம் மகிந்த வரை – அச்சிடத் தயார் நிலையில் மகாவம்ச நூலின் புதிய பதிப்பு

மகாவம்ச நூலின் மேலதிக இணைப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் காலம் வரையான புதிய பகுதிகள் அச்சிடப்படவுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல்- புலனாய்வுப் பிரிவு தலைவர்களிடமும் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் மற்றும் தற்போதைய இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சம்பந்தனுடன் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் மூலம், இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.