மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பாதாள உலகக் குழுவில் சாள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் போராளி?

கொழும்பில் பாதாள உலகக் குழுவுடன் இணைந்து செயற்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகப் பதிவேடுகளை சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

மின்னேரியா இராணுவ முகாமின் எரிபொருள் விநியோகம் தொடர்பான பதிவேடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஹோமகம பதில் நீதிவான், உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறது ஈபிடிபி- டக்ளசுக்கு அமைச்சர் பதவி?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி குழுவினருக்கும் இடையில், அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தெற்காசியாவின் உயரமான புத்தர் சிலை சிறிலங்காவில் – திறந்து வைக்கிறார் மைத்திரி

தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, மத்துகமவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும், ஏப்ரல் 23ஆம் நாள்- சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரிக்க சிறிலங்காவுக்கு ஐ,நாவும் உதவி

அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்பவும், ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு அமைவாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, விரிவான தீவிரவாத முறியடிப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு, சிறிலங்காவுக்கு உதவுவதாக ஐ.நாவின் தீவிரவாத முறியடிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணியகம் வாக்குறுதி அளித்துள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்குமா ஐரோப்பிய ஒன்றியம்? – நாளை மறுநாள் முடிவு

சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதித் தடையை நீக்குவது குறித்து தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரின் கையில் சிறிலங்கா காவல்துறை திணைக்களம்

சிறிலங்காவில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில், காவல்துறைத் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகளைப் பெற வடக்கு மக்கள் முண்டியடிக்கிறார்களாம் – சுவாமிநாதன் கூறுகிறார்

கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

மருத்துவமனையில் விக்னேஸ்வரன் – சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நாளை நடக்கவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பூரில் திரவ எரிவாயு மின்திட்டம்? – இந்தியா, ஜப்பானுடன் பேச சிறிலங்கா அரசு முடிவு

சம்பூரில், அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள, அனல் மின் நிலையங்களுக்குப் பதிலாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாக இந்தியாவுடனும், ஜப்பானுடனும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.