மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

செயற்கை மழைக்கு புதிய திணைக்களத்தை உருவாக்குகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தினால் ஐதேகவுக்குள் புகைச்சல்

சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.

ஐதேக அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் – சட்டம், ஒழுங்கு ரணிலிடம்

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆறு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பான  தீர்மானம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் கருதியே பிரிகேடியர் பிரியங்கவை திருப்பி அழைத்தேன் – சிறிலங்கா இராணுவத் தளபதி

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்புக் கருதியே, அவரை தாம் பிரித்தானியாவில் இருந்து திருப்பி அழைத்ததாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

உறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் வலியுறுத்தல்

நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்?

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு

மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக  சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் 10 சபைகளில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டில் சிக்கல்

வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.