மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.

சவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர்  எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

அனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறைத்தண்டனை

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், அரச படையினரை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தமிழக மீன்பிடிப் படகு மோதி சிறிலங்கா கடற்படைப் படகு சேதம்?

நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைத் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இருதரப்பு பாதுகாப்பு உடன்பாடு – அமெரிக்காவின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார்.

மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க சீனா இணக்கம்

சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மேலும் நிதியுதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய திட்டங்களின் மூலம், சிறிலங்காவுக்கு நிதியுதவிகளை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக,  நி்தியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடல் கண்காணிப்புக்கான அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, கைவிடப்பட்ட கடல்சார் கண்காணிப்பு அணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது  தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று முதல் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.