மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை

வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்கா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா படைகளுடன் பிரித்தானிய இராணுவமும் கூட்டுப் பயிற்சிக்கு ஆயத்தம்

சிறிலங்கா படைகளுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக, பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

புலனாய்வு அதிகாரிகளை ஒளிப்படம் எடுக்கவும் தடை

எதிர்காலத்தில் புலனாய்வு அதிகாரிகளிடம் காணொளிப் பதிவு கருவி மூலம், சாட்சியங்களை பதிவு செய்ய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தியா- சிறிலங்கா இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம்

இந்தியப் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும் சிறிலங்காவும் பரிமாறிக் கொள்வதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டது அமெரிக்க சரக்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய சந்தேகத்துக்குரிய அமெரிக்க சரக்கு விமானம் நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம்

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

‘சோபா’வை எதிர்க்கும் சிறிலங்கா – உன்னிப்பாக கவனிக்கும் புதுடெல்லி

அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘எகொனமிக் ரைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘’ஐ.எஸ் தாக்கவில்லை, அனைத்துலக சக்தியின் சதி வேலை” – என்கிறார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.