மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

குத்துக்கரணம் அடித்த வெள்ளை வான் சாட்சிகள் – ராஜிதவுக்கு எதிராக வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

அடுத்து வரும் விடுமுறைக் காலத்தில் சிறிலங்காவில் ‘தீவிரவாதிகள் சிறியளவிலான  அல்லது எச்சரிக்கை இல்லாத தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று . கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்கா தொடர்ந்து பயிற்சி

ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா கடற்படையின் முதலாவது குழுவுக்கு அமெரிக்க கடற்படையினர் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.

சிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள்

சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தலுக்கு ஆதாரம் இல்லை – சிஐடி

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர்  பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை மீளாய்வு செய்யப் போகிறது என்றும், இவற்றை மீளாய்வு செய்யும் வரை, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடாது என்றும் சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் Harusame என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி

எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களை கையாளும் வகையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று, சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்துள்ளார்.