சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது ஐ.நா விசாரணைக்குழு
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் சேகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் சேகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், துறைமுகங்களையும், தளங்களையும் கட்டியமைத்து, பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக, கடற்படைத் தலையீடுகளை விரிவுபடுத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புத் தொடர்பாக இந்தியா எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பேராசிரியர் சிறீகாந்த் கொண்டபள்ளி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், அதற்கு முஸ்லிம்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாகத் தகவல் வெளியிட்டுள்ளார், பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.
ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பொருத்தமான முறையில் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.