மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஆட்கடத்தல்களுக்கு சிறிலங்கா கடற்படை பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தெகிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றை, திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன், நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில் காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே, இந்தியக் கடற்படைத் தளபதி நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

போரில் மரணித்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சுமந்திரன்

போரில் உயிரிழந்த புலிகளின் உறுப்பினர்களுக்கு, அவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்த சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது சிறிலங்கா

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

அட்மிரல் கரன்னகொடவை கைது செய்ய வேண்டும் – நாடாளுமன்றில் சுமந்திரன்

திருகோணமலைக் கடற்படைத் தள இரகசிய வதைமுகாம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்களை கைது செய்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

வரவுசெலவுத் திட்ட அமர்வின் சுவாரசியங்கள்

சிறிலங்காவின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறிலங்காவின் வரவு செலவுத் திட்டத்தில் விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிப்பு

சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா அரசு

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக ராவண பலய பிக்குகள் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம் நடத்திய இராவண பலய அமைப்பு, நாகதீப என்பதை நயினாதீவு என்று  பெயர் மாற்றம் செய்தால், அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் தாம் அகற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளது.