மேலும்

தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி

SLFPசிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு டர்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவித்த அவர்,

”என்னுடன் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று எண்ணிப் பாருங்கள்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே என்று 42 மத்திய குழு உறுப்பினர்கள் மீள உறுதி செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, பெரும்பான்மை வாக்குகள் மூலம், கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்‌ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *