மேலும்

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் பங்கு போடுகிறது சிறிலங்கா

trincomalee oil farmதிருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து, கூட்டாக இயக்கவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சீனக்குடாவில் உள்ள மொத்தம் 99 எண்ணெய்க் குதங்களில், குறைந்தது 73 எண்ணெயக் குதங்கள் இந்தக் கூட்டு முயற்சித் திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ளன.

ஏனைய 10 எண்ணெய்க் குதங்களை சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தானபம் பயன்படுத்திக் கொள்ளவுள்ளது.

எஞ்சிய 14 எண்ணெய்க் குதங்களும் இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன.

2003ஆம் ஆண்டில்இந்த எண்ணெய்க் குதங்கள் மீது இந்தியா ஆர்வம் காட்டியிருந்தது. அப்போது ஒரு உடன்பாட்டின் மூலம் 99 எண்ணெய்க் குதங்களும் இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *