சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தன காலமானார்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.
இவர் சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஒரே மகனாவார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.
எயர் சிலோன் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றிய ரவி ஜெயவர்த்தன, பின்னர் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.
இதன்போதே அவர், 1984ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார்.
ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆரம்ப காலத்திலேயே நசுக்குவதில் மூளையாகச் செயற்பட்டவர்களில் ரவி ஜெயவர்த்தனவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது,